கோவை : கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், நேற்று பெய்த கோடை மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை : கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், நேற்று பெய்த கோடை மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மக்கள் பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த கோடை வெயிலின் தாக்கத்தை சற்று குறைக்கும் வகையில், அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழையினால், வெயிலின் தாக்கம் தணிந்து பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். கோவை, விருதுநகர், நாமக்கல், கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு, மதுரை மற்றுன் கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 120 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக கரூர் அரவக்குறிச்சியில் 10 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் 17 மி.மீ மழை பெய்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில், தாராபுரத்தில் 26 மி.மீ. மழையும், மூலனூரில் 20 மி.மீ. மழையும், அவிநாசியில் 11 மி.மீ. மழையும் பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில், கின்னிகொரையில் 26 மி.மீ. மழையும், கெத்தையில் 24 மி.மீ. மழையும், குந்தா பாலத்தில் 24 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மக்கள் பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த கோடை வெயிலின் தாக்கத்தை சற்று குறைக்கும் வகையில், அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழையினால், வெயிலின் தாக்கம் தணிந்து பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். கோவை, விருதுநகர், நாமக்கல், கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு, மதுரை மற்றுன் கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 120 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக கரூர் அரவக்குறிச்சியில் 10 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் 17 மி.மீ மழை பெய்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில், தாராபுரத்தில் 26 மி.மீ. மழையும், மூலனூரில் 20 மி.மீ. மழையும், அவிநாசியில் 11 மி.மீ. மழையும் பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில், கின்னிகொரையில் 26 மி.மீ. மழையும், கெத்தையில் 24 மி.மீ. மழையும், குந்தா பாலத்தில் 24 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.