கோவை : கோவையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் நேற்று முன்தினம் சாலை விபத்தில் சிக்கிய நிலையில், இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை : கோவையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் நேற்று முன்தினம் சாலை விபத்தில் சிக்கிய நிலையில், இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் (25) என்பவர் ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றி வந்தார். தேர்தல் பணிக்காக கோவை வந்த அவர், கடந்த 17-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சுங்கம் பைபாஸ் சாலையிலிருந்து அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, உக்கடத்தில் இருந்து சுங்கம் நோக்கி வந்த இருசக்கர வாகனம், அவரது வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஸ்ரீனிவாசன் பலத்த காயமடைந்தார்.
பின்னர், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், ஸ்ரீனிவாசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்ரீனிவாசனுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற குனியமுத்தூர் எஸ்.ஐ. குப்புராஜ் என்பவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.