கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களின் பெயர்களை தி.மு.க. தலைமை கழகம் இன்று அறிவித்துள்ளது
கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களின் பெயர்களை தி.மு.க. தலைமை கழகம் இன்று அறிவித்துள்ளது
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளில், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நேற்று நடைபெற்றது. எஞ்சியுள்ள ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவை திரும்பப் பெற மே 2-ம் தேதி கடைசி நாளாகும்.
இதில், கோவை சூலூர் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. சொத்து பாதுகாப்புக் குழு துணை தலைவர் பொங்கலூர். பழனிசாமி போட்டியிடுகிறார். இந்த நிலையில், சூலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. பொறுப்பாளர்களின் பெயர்களை தி.மு.க. தலைமைக் கழகம் இன்று அறிவித்துள்ளது. இதில், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.வ.வேலு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் த.மோ.அன்பரசு, வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
மேலும், நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் பெயர்களையும் அறிவித்துள்ளது.