தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 70.90 சதவீத வாக்குகள் பதிவு : இடைத்தேர்தலில் 71.62 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல, 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல, 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் நேற்று இரவு 9 மணி நிலவர அடிப்படையில், தமிழகத்தில் 70.90% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 79.75% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 57.43% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மதுரை தொகுதியில் 8 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டதாலும், ஆறு மணிக்கு முன்பே வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் பிற தொகுதிகளின் சில வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து வாக்களித்து வந்ததாலும் பதிவான வாக்குகளின் விகிதம் அதிகரித்துள்ளது. இரவு 9 மணி மணி வரை 62.01% வாக்குகள் மதுரையில் பதிவாகியுள்ளன.

அதேபோல, இடைத்தேர்தல் நடந்த 18 சட்டமன்றத் தொகுதிகளில் இரவு 9 மணி வரை 71.62% வாக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் அதிகபட்சமாக அரூர் தொகுதியில் 86.96% வாக்குகளும், குறைந்தபட்சமாக சாத்தூர் தொகுதியில் 60.87% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...