கோவை : பிளஸ்2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
கோவை : பிளஸ்2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மொத்தம் 8 லட்சத்து 97 ஆயிரத்து 992 பள்ளி மாணவ, மாணவிகளும், 47 சிறை கைதிகளும் இந்த தேர்வினை எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளங்களில் வெளியிடப்படப்பட்டது. மொத்தம் 91.30 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.64 மாணவிகளும், 88.57 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல, மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனிடையே, பிளஸ்2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீதங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ஈரோடு 95.23 சதவீதமும், பெரம்பலூர் 95.15 சதவீதமும்,கோவை 95.01 சதவீதமும் பெற்றுள்ளது. அதேபோல, தனியார் பள்ளிக்கு நிகராக மொத்தம் 7,083 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,281 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.