தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் வாக்கு சதவீத விபரங்களை இன்று மாலை சென்னையில் வெளியிட்டார். அவர் கூறியதாவது :- தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 78 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 57.05 சதவீத வாக்குகளும் பதிவாகின. சித்திரை திருவிழாவையொட்டி, இரவு 8 மணி வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ள மதுரை தொகுதியில், மாலை 6 மணி வரை 60.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல, 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக அரூரில் 89.96 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சாத்தூரில் 60.87 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தலின் போது எந்த இடத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை. எந்த தொகுதிக்கும் மறுதேர்தல் நடத்தப்பட தேவையில்லை, என்றார்.