கோவையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் மீது பொதுமக்கள் தாக்குதல்

கோவை : கோவை - பாலக்காடு சாலையில் பல்வேறு வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற காரை மடக்கி ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.


கோவை : கோவை - பாலக்காடு சாலையில் பல்வேறு வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற காரை மடக்கி ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். 

இன்று மதியம் KL 07 M 2181 என்ற எண் கொண்ட சொகுசு கார், கோவையிலிருந்து கேரளா நோக்கி அதிவேகமாக சென்றது. அந்த கார் கோவைபுதூரையடுத்த மைல்கல் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் புயல் வேகத்தில் சென்றது. அதைத்தொடர்ந்து, சாலையிலிருந்த தடுப்பில் மோதி நின்றது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் வந்த காரின் ஓட்டுநரை அங்கிருந்த பொதுமக்கள் கடுமையாக தாக்கினர். 



பின்னர், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காருக்குள் இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் கோவைப்புதூர் அருகேயும், பேரூர் அருகேயும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...