விலைவாசி உயர்வற்ற 5 ஆண்டுகால ஆட்சிக்கு மக்களிடம் மகத்தான வரவேற்பு : கோவை பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ஆர்.

திருப்பூர் : விலைவாசி உயர்வற்ற 5 ஆண்டுகால ஆட்சிக்கு மக்களிடம் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளதாக திருப்பூர் மக்களவை தொகுதியில் வாக்களித்த பிறகு கோவை பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர் : விலைவாசி உயர்வற்ற 5 ஆண்டுகால ஆட்சிக்கு மக்களிடம் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளதாக திருப்பூர் மக்களவை தொகுதியில் வாக்களித்த பிறகு கோவை பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூர் அரண்மனைபுதூர் வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பிரதமர் மோடியின் விலைவாசி உயர்வற்ற 5 ஆண்டுகால ஆட்சிக்கு மக்களிடம் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. ஏழைகளின் காவலனாய் போற்றப்படுபவராக மோடி உயர்ந்துள்ளார். ஒட்டுமொத்த தமிழகத்திலும் 39 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் மிகப்பெரிய வெற்றி பெறும். அடுத்த அரசு மத்தியிலே அமையும் போது தமிழர்களின் சொல்லுக்கு டெல்லி செவிசாய்க்கின்ற வெற்றியாக இது அமையும், எனக் கூறினார். 



முன்னதாக, சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களிக்க வந்த போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர் தனது பணியை விட்டு விட்டு சி.பி. ராதாகிருஷ்ணனுடன் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர், சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அவரே மை வைத்து வாக்களிக்க அனுப்பினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...