திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை இலையை குறிக்கும் வகையில், இரு விரல்களை உயர்த்தி காட்டியதால், ஆளும் கட்சியினர் மற்றும் பிற கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை இலையை குறிக்கும் வகையில், இரு விரல்களை உயர்த்தி காட்டியதால், ஆளும் கட்சியினர் மற்றும் பிற கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர் முருங்கப்பாளையத்தில் உள்ள தெற்கு பகுதி 1-ம் எண் வாக்குச்சாவடி மையத்தில் திருப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது, இரட்டை இலையைக் குறிக்கும் வகையில் இருவிரல்களை உயர்த்தி காண்பித்தார். அப்போது, அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள், அவ்வாறு காண்பிக்கக் கூடாது என எச்சரித்தனர். இந்த நிலையில், வாக்குச்சாவடி மையத்தில் அமர்ந்திருந்த மற்ற கட்சியினரின் பூத் ஏஜெண்டுகள், அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதுபோன்ற விளம்பர செயல்களை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுடன் வந்தவர்களை வெளியேறச் சொல்லி, மற்ற கட்சியினரின் பூத் ஏஜெண்டுகள் அ.தி.மு.க.வினரை முற்றுகையிட்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.