கோவை, பொள்ளாச்சி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தீவிரம்

கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் மதுரையை தவிர்த்து மற்ற 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, 6 மணிக்கு முன்பாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் தற்போதும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 



அதேவேளையில், பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டது. இதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முத்திரையிடப்பட்டு சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சீல் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் வைக்கப்பட இருக்கிறது. வரும் மே 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, வேட்பாளரின் வெற்றி அறிவிக்கப்படும்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...