கோவை : கோவையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்களிக்கச் சென்ற போது, வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்த முதியவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்
கோவை : கோவையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்களிக்கச் சென்ற போது, வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்த முதியவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்
கோவை ஈச்சனாரி பாடசாலை வீதியில் உள்ள பள்ளியில் அய்யம்மாள் (85) என்ற மூதாட்டி வாக்களிக்க வந்திருந்தபோது, வாக்குச்சாவடியின் உள்ளே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால், வாக்களிக்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து போத்தனூர் போலீசார் மூதாட்டி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, காந்தி மாநகர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பாலகிருஷ்ணன் என்பவர் வாக்கு அளிக்க சென்றபோது வாக்குசாவடியின் உள்ளே மயங்கி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.