கோவையில் மெக்கானிக்கை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பல் : போலீசார் விசாரணை

கோவை : செட்டிபாளையம் அருகே மெக்கானிக் ஒருவரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : செட்டிபாளையம் அருகே மெக்கானிக் ஒருவரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவையை அடுத்த செட்டிப்பாளையம் மீனா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன் (40). இவர் போத்தனூர் - செட்டிப்பாளையம் ரயில்வே கேட் அருகில் மெக்கானிக் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் இன்று வழக்கம்போல பணி புரிந்து வந்தார். அப்போது, திடீரென சுமார் 11.30 மணியளவில், 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கடையில் இருந்த பரந்தாமனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



மேலும், சம்பவம் நடந்தபோது கடையில் இருந்த பெண் ஊழியர், மற்றும் இரு ஆண் ஊழியர்களை மிரட்டி விட்டும் அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது. பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்ய வந்த மர்ம கும்பல் முதலில் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்தெறிந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...