பார்வையற்றவருக்கு உதவிய அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலருக்கு அனுமதி மறுப்பு : காவல்துறையுடன் வாக்குவாதம்

கோவை : கோவையில் கண்பார்வையற்றவரை வாக்குப்பதிவு செய்ய உள்ளே அழைத்துச் சென்ற அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலருக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், காவல்துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.


கோவை : கோவையில் கண்பார்வையற்றவரை வாக்குப்பதிவு செய்ய உள்ளே அழைத்துச் சென்ற அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலருக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், காவல்துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. 

கோவை போத்தனூர் பகுதி 100-வது வார்டின் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் வேணுகோபால். இன்று மேட்டூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு கண்பார்வையற்ற சிலரை வாக்களிக்க அழைத்துச் சென்றுள்ளார். மேலும், அவர்களுக்கு உதவியாக வாக்குச்சாவடிக்குள் சென்று உதவுவதாக உள்ளே சென்றார். ஆனால், அங்கிருந்த காவல்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் அவரை உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இதையடுத்து, அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவர்கள் அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த நபர்கள் என்றும், அவர்களுடைய வாக்கு வேறு யாருக்கும் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் நான் உதவுகிறேன் என வாக்குவாதம் செய்தார். 

தொடர்ந்து, அவர்களுக்கு தாங்கள் உதவுவதாக அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் கூறியதையடுத்து, அங்கிருந்து அவர் வெளியேறினார். வாக்குச்சாவடிக்குள் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலருக்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் மூண்டதால் லேசான பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...