கோவை : நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அ.தி.மு.க. கூட்டணி முடிவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் அளித்துள்ளது.
கோவை : நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அ.தி.மு.க. கூட்டணி முடிவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் அளித்துள்ளது.
கோவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் நெருக்கமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், தி.மு.க. சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு ஒன்றை அளித்துள்ளது. அதில், வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளதாகவும், முறைகேடுகளை தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் நெருக்கமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், தி.மு.க. சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு ஒன்றை அளித்துள்ளது. அதில், வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளதாகவும், முறைகேடுகளை தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.