கடலூர் தொகுதிக்கு உள்பட்ட திருவதிகை வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்கு இயந்திரத்தில் அ.ம.மு.க. வேட்பாளரின் பெயருக்கான பட்டன் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் தொகுதிக்கு உள்பட்ட திருவதிகை வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்கு இயந்திரத்தில் அ.ம.மு.க. வேட்பாளரின் பெயருக்கான பட்டன் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலூரை தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது. மேலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமாக வந்து நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூர் தொகுதிக்கு உள்பட்ட திருவதிகை வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் காசி. தங்கவேல் பெயருக்கு நேரான பட்டன் இல்லை. இதனால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் மாற்று இயந்திரம் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, கடலூர் கடலூர் தொகுதிக்கு உள்பட்ட திருவதிகை வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என அ.ம.மு.க. வேட்பாளர் காசி. தங்கவேல் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.