கோவை : கோவை காந்தி மாநகர் பகுதியின் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கோவை : கோவை காந்தி மாநகர் பகுதியின் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
காந்தி மாநகர் வின்சென்ட் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது மகனுடன் பாலகிருஷ்ணன் (81) என்ற முதியவர் வாக்கு அளிக்கச் சென்றிருந்தார். அப்போது, வாக்களிப்பதற்காக காத்திருந்த அவர், திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று உள்ளனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், உயிரிழந்த முதியவர் காந்தி மாநகர் தண்ணீர் தொட்டி அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்ததும், இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்பதும் தெரிய வந்துள்ளது.