கோவை : மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என கோவையில் முதல் முறையாக வாக்களித்த வாக்காளர்கள் கூறினர்.
கோவை : மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என கோவையில் முதல் முறையாக வாக்களித்த வாக்காளர்கள் கூறினர்.
கோவை பந்தய சாலை பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மற்றும் அகிலா ஆகியோர் முதன் முறையாக தேர்தலில் வாக்களித்தனர். பந்தய சாலையில் உள்ள அரசு கலை கல்லூரியில் வாக்களித்த பின்னர் அவர்கள் கூறுகையில் , “முதல் முறையாக வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையாக தவறாமல் வேண்டும், என்றனர்.
அப்போது, வேட்பாளர்கள் குறித்து எவ்வாறு தெரிந்து கொண்டீர்கள் என்ற கேட்டபோது, சமூக வலைதளங்கள் மூலமாக வேட்பாளர்களை பற்றி தெரிந்து கொண்டதாக தெரிவித்தனர். புதிய வாக்காளர் என்ற முறையில் வாக்களிக்க வந்த இடத்தில் தங்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் இருந்த உதவியாளர்கள் தங்களுக்கு உதவியதாக கூறியவர்கள், மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும், என்றனர்.