கோவை : ஈரநெஞ்சம் காப்பகத்தில் வசித்து வரும் 59 ஆதரவற்ற முதியவர்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார்.
கோவை : ஈரநெஞ்சம் காப்பகத்தில் வசித்து வரும் 59 ஆதரவற்ற முதியவர்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் 60 வயது முதல் 90 வயது வரையிலான 5 ஆண்கள் மற்றும் 54 பெண்கள் என மொத்தம் 59 முதியவர்கள் வசித்து வருகின்றனர்.
பல்வேறு காரணங்களால் தனிமைப்படுத்தப்பட்டு ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வரும் இவர்கள், இந்த மக்களவை தேர்தலில் முதன்முறையாக வாக்களித்தனர்.

அறக்கட்டளையை சேர்ந்த மகேந்திரனின் முயற்சியால் வாக்களிப்பது என்றால் என்னவென்றே தெரியாத பலரும், பல ஆண்டுகளாக வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் இருந்தவர்களும் இன்று ஆர்.எஸ். புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

அதேபோல, நடக்கமுடியாத முதியவர்கள் தள்ளுவண்டிகள் மூலமாக வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து வரப்பட்டனர். தனது பிள்ளைகளால் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு வாழ்ந்து வரும் இந்த முதியவர்கள், தற்போது தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியதால் வெளிப்பட்ட மகிழ்ச்சி காண்போரின் நெஞ்சை கவர்ந்தது.