பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை வேரோடு சாய்க்க கூடிய தேர்தல் : வாக்குப்பதிவுக்கு பிறகு தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் பேட்டி

கோவை : பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை வேரோடு சாய்க்க கூடிய தேர்தலாக இது இருக்கும் என கோவையில் வாக்களித்த பிறகு தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் தெரிவித்தார்.


கோவை : பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை வேரோடு சாய்க்க கூடிய தேர்தலாக இது இருக்கும் என கோவையில் வாக்களித்த பிறகு தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்ததாவது :- மத்தியில் கடந்த ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்த பா.ஜ.க., மக்கள் விரோத செயல்களை செயல்படுத்தியது. பணமதிப்பிழப்பு செய்து பணத்திற்காக மக்களை வீதி வீதியாக அலைய வைத்த பா.ஜ.க அரசிற்கு பாடம் புகட்டும் வகையில், இந்த தேர்தல் முடிவுகள் இருக்கும். கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எடுபுடியாக செயல்படும் தமிழக அரசை உடனடியாக துரத்தி அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். 

கோவையில் ஜி.எஸ்.டி. காரணமாக தொழில்கள் பாதிக்கப்படும் வகையில், இரண்டு அரசுகளும் செயல்பட்டு உள்ளது. மக்கள் பெரும் பெருந்திரளாக வந்து வாக்களித்த வருகின்றனர். பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை வேரோடு சாய்க்க கூடிய தேர்தலாக இது இருக்கும். 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று, மாநில அரசை வீழ்த்துகின்ற தேர்தலாக இது இருக்கும், என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...