கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் அப்பாதுரை பொள்ளாச்சியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் அப்பாதுரை பொள்ளாச்சியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
கோவை நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அப்பாதுரை களமிறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் இன்று தனது சொந்த ஊரான பொள்ளாச்சியில் உள்ள சடையன்கவுண்டன்புதூரில் உள்ள ஆரம்பப்பள்ளியில் தனது வாக்கினை இன்று பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ டிடிவி தினகரனால் மட்டுமே நிலையான ஆட்சியை அளிக்க முடியும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். தற்போது உள்ள ஆட்சியை அகற்ற இதுவே சரியான தருணம்,” என்றார்.