கோவை : வாக்குசீட்டு முறையை விட தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவிபேட் தொழில்நுட்பம் நன்றாக உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை : வாக்குசீட்டு முறையை விட தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவிபேட் தொழில்நுட்பம் நன்றாக உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை சுகுணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்த பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- ஒவ்வொருவரும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையைக் ஆற்ற வேண்டும். பல்வேறு மக்கள் நலதிட்டங்களைக் சிறப்பாக செய்த ஜெயலிதாவின் அரசுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். அதேபோல், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும். வாக்குசீட்டு முறையை விட புதிதாக தொழில் நுட்ப ரீதியில் வந்த, விவிபேட் இயந்திரம் நன்றாக உள்ளது, என்றார்.