கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவன் திடீரென மயங்கி விழுந்து மரணம் ; போலீசார் தீவிர விசாரணை

கோவை : குனியமுத்தூர் அருகே வீட்டிற்கு பால் வாங்கச் சென்ற பள்ளி மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : குனியமுத்தூர் அருகே வீட்டிற்கு பால் வாங்கச் சென்ற பள்ளி மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் சந்தோஷ். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். மேலும், இவர் பகுதி நேரமாக தேனீர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் பணி முடிந்து வந்து கொண்டிருந்தபோது, தனது வீட்டிற்காக பால் வாங்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயக்கம் அடைந்த மாணவர் பேச்சு மூச்சற்ற நிலையில், சாலையில் விழுந்து கிடந்தார். 

இதையடுத்து, மாணவனை பரிசோதித்தவர்கள் மாணவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் காவல்துறையினர் தேர்தல் பரபரப்பினால் மாணவனின் உடலை உடனடியாக பெற்றுச் செல்லும்படி மாணவனின் உறவினர்களுக்கு அறிவுறுத்தினர். பின்னர், பேச்சுவார்த்தைக்கு பின் மாணவனின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேதக் கிடங்கிற்கு அனுப்பப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...