கோவை : வாக்களார்கள் வரக்கூடியது பொறுத்து கூடுதல் அவகாசம் வழங்கப்படும். மாலை 6 மணிக்கு வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறினார்.
கோவை : வாக்களார்கள் வரக்கூடியது பொறுத்து கூடுதல் அவகாசம் வழங்கப்படும். மாலை 6 மணிக்கு வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி பந்தய சாலையில் உள்ள அரசு கல்லூரியில் தனது வாக்கை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கோவையில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு பூச் சிலிப் கிடைக்கப் பெறவில்லை. அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மேலும், வாக்குச்சாவடிகளில் பூத் சிலிப்களும் வைக்கப்பட்டுள்ளது. சுமூகமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது,என்றார்.
இதனிடையே, சித்தாபுதூர் மற்றும் வெள்ளலூர் பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு உள்ளதாக கேட்கபட்ட கேள்விக்கு, “இயந்திரங்கள் கோளாறு பற்றி எந்த தகவலும் வரவில்லை. கூடுதலாக 20% வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கிறது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். மாலை 6 மணிக்கு எத்தனை வாக்காளர்கள் வந்தாலும், அனைவரும் வாக்குப்பதிவு செய்யும் வரை நேரம் நீட்டிக்கப்படும்,” என ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.