போதிய பேருந்து வசதி இல்லாததால் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் திணறல் : ஆத்திரத்தில் சாலை மறியல்

கோவை : கோவையில் வசித்து வரும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இரவில் பணி முடிந்து வாக்களிக்க தங்களது சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை : கோவையில் வசித்து வரும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இரவில் பணி முடிந்து வாக்களிக்க தங்களது சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை மாநகரம் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள தொழில் நகரமாக உள்ளது. இந்த மாநகரில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். தேர்தல் நடைபெறும் காலங்களில் வாக்குப்பதிவு செய்ய அவரவர் தம் சொந்த ஊர்களுக்கு செல்ல ம்வது வழக்கம். அப்படி தேர்தல் நேரங்களில் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 



இந்த நிலையில், ஓட்டு போடுவதற்காக தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பணி முடிந்து, இரவு நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். அப்போது, தென் மாவட்டமான மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிக்கு பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர். 

100% வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தும் தேர்தல் ஆணையம், வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றோ அல்லது இருக்கும் ஊர்களில் வாக்களிக்கவோ போதிய வசதிகளை செய்யவில்லை என பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...