கோவை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், கோவையிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோவை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், கோவையிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்களின் வசதிக்காக, குடிநீர், பந்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக சக்கர நாற்காலிகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரு மக்களவை தொகுதிகளுக்குட்பட்ட மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளில் 975 மையங்களில் 3,070 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 லட்சத்து 38 ஆயிரத்து 442 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 66 ஆயிரத்து 331 பெண் வாக்காளர்களும், 341 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 29 லட்சத்து 05 ஆயிரத்து 114 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்ய உள்ளனர்.