கோவை : மலுமிச்சம்பட்டி அருகே அ.தி.மு.க.வின் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிக்க சென்றதாக எழுந்த புகாரையடுத்து, பொதுமக்கள் இத்தனை நாட்கள் இல்லாமல் எதற்காக எங்களைப் பார்க்க வந்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மலுமிச்சம்பட்டி அருகே அ.தி.மு.க.வின் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிக்க சென்றதாக எழுந்த புகாரையடுத்து, பொதுமக்கள் இத்தனை நாட்கள் இல்லாமல் எதற்காக எங்களைப் பார்க்க வந்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த பொதுமக்களை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அன்பு நகருக்கு அரசின் உத்தரவுப்படி இடம் மாற்றப்பட்டனர். இதனையடுத்து, மலுமிச்சம்பட்டி பகுதிக்கு இடமாற்றப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் மலுமிச்சம்பட்டி பகுதியில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் பொதுமக்களிடம் வாக்களிக்க வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் அவரை சூழ்ந்துகொண்டு, இவ்வளவு நாள் எங்கே போனீர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல் நாங்கள் சிரமப்படுவதாகவும், ஓட்டுப்போட மட்டும் நாங்கள் வேண்டுமா..? என கேள்வி எழுப்பினர். அதேபோல, பொதுமக்கள் பிரச்சாரம் செய்ய வந்துள்ளீர்களா..? எனவும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அவர் தாமரைக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் பிரச்சார நேற்று மாலை 6 மணியுடன் முடிந்த நிலையில், தேர்தல் விதிமீறி ஒவ்வொரு பகுதிகளில் பிரச்சாரம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.