கோவை : நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு பணியாளர் அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம்.
கோவை : நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு பணியாளர் அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம்.
கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 3,070 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மையங்கள் அனைத்திலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்பட வாக்காளர் சீட்டுகள் (பூத் ஸ்லிப்) வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, வாக்காளர் சீட்டுகள் (பூத் ஸ்லிப்) பெறாதவர்கள், வாக்குப்பதிவு மையத்தின் வளாகத்தில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
வாக்காளர் சீட்டுக்கள் வாக்காளர்களுக்கு தகவலுக்காகவும், வாக்குப்பதிவு மையங்கள் அமைவிடம் குறித்தான வழிகாட்டுதலுக்காகவும் மட்டுமே ஆகும். வாக்காளர் சீட்டுகள் மட்டும் வைத்து வாக்காளர்கள் வாக்களிக்க முடியாது. ஆனால், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். அவ்வாறு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை காண்பிக்க இயலாதவர்கள் கீழ்க்கண்ட 11 மாற்றுப் புகைப்பட அடையாள ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
1. கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்)
2. ஓட்டுநர் உரிமம்
3. மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
4. வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக அட்டை
5. நிரந்தர கணக்கு எண் அட்டை
6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
7. வேலை உறுதி திட்டப் பணி அட்டை
8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
10. எம்.பி., எம்.எல்.ஏ., சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை
11. ஆதார் அட்டை ஆகிய 11 வகையான புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களைக்காட்டி வாக்களிக்கலாம்.