கோவை : உக்கடம் பைபாஸ் அருகே எதிரே வந்த வாகனம் உரசியதில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலர்கள் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை : உக்கடம் பைபாஸ் அருகே எதிரே வந்த வாகனம் உரசியதில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலர்கள் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட குனியமுத்தூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் குப்புராஜ் (38). இவருடன் இன்று தேர்தல் பணிக்காக சீனிவாசன் என்ற காவலரும் இருசக்கர வாகனத்தில் உக்கடம் பைபாஸ் பகுதியில் இருந்து கோவை அரசு மருத்துவமனை செல்லும் வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, வாகனத்தை ஓட்டி வந்த உதவி ஆய்வாளர் குப்புராஜ் வளைவில் வளைக்கும் போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் ஓரத்தில் உரசியதில் கீழே விழுந்தனர்.

இதையடுத்து, தகவல் தெரிந்த அருகே வந்த தனியார் வாகனத்தினர் குப்புராஜை கங்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சீனிவாசனை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது, சீனிவாசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.