நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சுறுத்தல் உள்ள வாக்குசாவடிகளுக்கு வனத்துறையினர் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சுறுத்தல் உள்ள வாக்குசாவடிகளுக்கு வனத்துறையினர் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- கூடலூரில் உள்ள வாக்குச்சாவடிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து, அதற்கு 5 பேர் கொண்ட வனக்குழுவினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகளிலிருந்து வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பளிக்க 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுவாக, கூடலூர் பகுதி தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் இருப்பதாலும், வனங்கள் நிறைந்து காணப்படுவதாலும் வனவிலங்குகள் அச்சுறுத்தல் இருப்பது வழக்கம். எனவே, வனத்துறையினர் இவற்றின் நடமாட்டம் வாக்குச்சாவடி மையங்களுக்கு அருகிலோ அல்லது வாக்களிக்க வரும் கிராம மக்களை அச்சுறுத்தும் விதமாக இருந்து விடக்கூடாது என்பதால், வனத்துறையினர் 24 மணிநேர கண்காணிப்பு பணியினை மேற்கொண்டுள்ளனர். ஆகவே, பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.