தேர்தலுக்கு இன்னும் 24 மணிநேரம் கூட இல்லாத நிலையில் உதகையில் கோடை மழை

நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 24 மணிநேரம் கூட இல்லாத நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.


நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 24 மணிநேரம் கூட இல்லாத நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், உதகைக்கு சமவெளி பிரதேசங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், இங்குள்ள இதமான காலநிலை அனுபவித்துச் செல்கின்றனர். கடந்த சில நாட்களாக சமவெளி பிரதேசங்கள் போல் உதகை நகரிலும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால், கோடை சீசனின் போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. அதேவேளையில், மலை தோட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ள விளை நிலங்களுக்கு போதிய தண்ணீர் இன்றியும் விவசாயிகள் கவலையடைந்தனர்.



இந்த நிலையில், இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில், பிற்பகல் முதல் உதகை நகரம், பிங்கர் போஸ்ட், நஞ்சநாடு, இத்தலார், எமரால்டு போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் கோடை சீசனில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சீராக தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருநாள் கூட இல்லாத நிலையில், உதகையில் கோடை மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...