நீலகிரி தொகுதியில் கண்டறியப்பட்ட 120 பதட்டமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

நீலகிரி : நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் 120 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


நீலகிரி : நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் 120 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளில் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், ஈரோட்டில் உள்ள பவானி சாகர், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய 6 தொகுதிகளில் மொத்தம் 13 லட்சத்து 65 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், 6 லட்சத்து 65 ஆயிரத்து 337 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 202 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக நீலகிரி தொகுதியில் மொத்தம் 1,610 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 736 வாக்குச்சாவடிகள் நகரப்பகுதிகளிலும், 874 வாக்குச்சாவடிகள் ஊரக பகுதிகளிலும் உள்ளன. இதில்120 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறிப்பட்டுள்ளன.



நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 78 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. பதட்டமான வாக்குச்சாவடிகளில் ஒவ்வொன்றிலும் ஒரு நுண் பார்வையாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார். 656 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 7,786 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 2,500 காவலர்கள், அதிரடிப் படையினர், என்.எஸ்.டி என்றழைக்கப்படும் நக்சல் தேடுதல் படைப் பிரிவினர் என பல பிரிவினச் சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...