ஏ.டி.எம். மையத்தில் ஏ.டி.எம்.கார்டுகளை அலட்சியமாக விட்டுச்செல்லும் வாடிக்கையாளர்கள் : சமூக விரோத கும்பல் மூலம் ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கை

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் உள்ள ஸ்டேட் பாங்கிற்க்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி விட்டு, அங்கேயே அலட்சியமாக அதனை விட்டுச் செல்வதால், சமூக விரோத கும்பல் மூலம் ஆபத்தை விளைவிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் உள்ள ஸ்டேட் பாங்கிற்க்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி விட்டு, அங்கேயே அலட்சியமாக அதனை விட்டுச் செல்வதால், சமூக விரோத கும்பல் மூலம் ஆபத்தை விளைவிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் ஸ்டேட் பாங்கிற்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுப்பதற்காக வருபவர்கள் ஏ.டி.எம். கார்டை உள்ளே செலுத்திவிட்டு மீண்டும் கார்டை எடுக்காமல் மறந்து விடுகின்றனர். இப்படி தினமும் பத்துக்கும் மேற்பட்டோர் கார்டுகளை எடுக்காமல் மறந்து செல்வதும், பின்னர் மீண்டும் வந்து எடுத்துச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. 



அதேபோல, வெளியூரிலிருந்து வந்து பயன்படுத்தும் பயனாளிகள் ஏ.டி.எம். கார்டை மறந்து வைத்ததுடன், மீண்டும் கார்டுகளை எடுக்க வருவதில்லை. இப்படி தொடரும் அலட்சியத்தால் பல வங்கியின் ஏ.டி.எம். கார்டுகள் இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்தில் குவிந்துள்ளது. 

ஏ.டி.எம். கார்டுகளை கொண்டு கொள்ளையடிக்கும் நவீன கும்பல்கள் சுற்றித்திரியும் இந்த சமூகத்தில், பொதுமக்கள் இப்படி அலட்சியமாக ஏ.டி.எம். கார்டுகளை மறந்து விட்டு செல்வது ஆபத்தை விளைவிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...