தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு தினமே உள்ள நிலையில், தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு தினமே உள்ள நிலையில், தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று மாலை உடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்துள்ளது. இந்த சூழலில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி குறிஞ்சி நகரில் தூத்துக்குடியில் உள்ள தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் இறங்கியுள்ளது. கனிமொழி வீட்டின் மேல் தளத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வருமான வரித்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. 

கனிமொழியின் வீடு மற்றும் அலுவலகங்களில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து உள்ளே நுழைய, வெளியே செல்ல வருமான வரித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதனால், தமிழக தேர்தல் களம் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சோதனையில் எந்த ஆவணங்களும், ரொக்கமும் கிடைக்காததால்,  தங்களுக்கு தவறான தகவல் வந்ததாகக் கூறிவிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...