செல்வபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக தகவல் : வருமான வரித்துறையின, தேர்தல் அதிகாரிகள் விசாரணை

கோவை : செல்வபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக எழுந்த புகாரின் பேரில் காவல்துறையினர், வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை : செல்வபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக எழுந்த புகாரின் பேரில் காவல்துறையினர், வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்வபுரம் பகுதியில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து வருவதாக எழுந்த புகாரை அடுத்து அ.தி.மு.க.வினர் அந்தப் பகுதியில் குவிந்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக செல்வபுரம் காவல் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் அளித்தனர். இதனையடுத்து, வருமான வரித்துறையினர் செல்வபுரம் பகுதியில் தீபம் ஸ்கேன் என்கின்ற கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் தேர்தல் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல, அந்த அலுவலகத்தில் உள்ள கணினிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், பணம் கொடுத்த தி.மு.க.வினர் இரண்டு பேரை செல்வபுரம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...