50 ஆண்டு கால தனது பொதுவாழ்விற்கு கிடைத்த அங்கீகாரம் : சூலூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொங்கலூர் பழனிசாமி நெகிழ்ச்சி

கோவை : சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது, தனது 50 ஆண்டுகால பொதுவாழ்விற்கு கிடைத்த அங்கீகாரம் என முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவை : சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது, தனது 50 ஆண்டுகால பொதுவாழ்விற்கு கிடைத்த அங்கீகாரம் என முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கோவை பீளமேட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பொங்கலூர் பழனிசாமி பேசியதாவது :- சூலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தனது 50 ஆண்டு கால பொதுவாழ்விற்காக கிடைத்த அங்கீகாரம். தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுவதை பெருமையாகக் கருதுகிறேன். 

3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை அமைச்சராகவும் இருந்துள்ளேன். செம்மொழி மாநாட்டின் போது கோவை நகர வளர்ச்சிக்காக திட்டங்களை செயல்படுத்தினேன். சூலூர் தொகுதியில் விசைத்தறி மற்றும் விவசாய தொழில்கள் மேம்பாட்டிற்காகப் பாடுபடுவேன். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்தவும் முயற்சிப்பேன். ஜி.எஸ்.டி.யினால் விசைத்தறி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. வரியினை குறைக்க தி.மு.க., காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

கோவை - சூலூர் இடையே ஆறு வழிச்சாலை அமைப்போம். ஒருமாத காலத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, சூலூர் தொகுதியில் பரப்புரையை மேற்கொள்வோம், என அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...