நீலகிரியில் அ.ம.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் சலசலப்பு

நீலகிரி: நீலகிரியில் பிரச்சாரத்தின் போது, ஜெயலலிதாவை பெயர் சொல்லி கூறிவருவதாகக் கூறி அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அ.ம.மு.க. நிர்வாகியிடம் அம்மா என்று கூறும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.


நீலகிரி: நீலகிரியில் பிரச்சாரத்தின் போது, ஜெயலலிதாவை பெயர் சொல்லி கூறிவருவதாகக் கூறி அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அ.ம.மு.க. நிர்வாகியிடம் அம்மா என்று கூறும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. 



நாடாளுமன்ற தேர்தக் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அ.ம.மு.க.விற்கு ஆதரவாக அக்கட்சியை சேர்ந்தவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஜெயலலிதாவை பெயர் சொல்லி கூறிவருவதாகக் கூறி அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அ.ம.மு.க. நிர்வாகியிடம் அம்மா என்று கூறும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஜெயலலிதாவை அம்மா என்று சொல்லாமல் ஜெயலலிதா என்று தொடர்ந்து கூறி வந்ததால், இதனைக் கேட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அண்ணா சிலை அருகே வந்து அ.ம.மு.க.வைச் சேர்ந்த உள்ளூர் பேச்சாளருக்கு கண்டனம் தெரிவித்து முற்றுகையிட வந்தனர்.

இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், காவல் ஆய்வாளர் அம்மா துரை தலைமையிலான காவலர்கள் அங்கே குவிக்கப் பட்டனர். மேலும், அடைமொழிகள் குறித்தெல்லாம் வழக்குப் பதிவு செய்வது என்பது இயலாத காரியம் என்பதால், புகார் கொடுத்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் கூறினர். இதனைத் தொடர்ந்து, இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் புகார் கொடுக்காமல் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...