கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எல்.எம்.டபுள்யூ. நிறுவன ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எல்.எம்.டபுள்யூ. நிறுவன ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பெரியநாயக்கன் பாளையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கு. ராசாமணி தலைமையில் ஊழியர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேசன், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மேலாண் இயக்குநர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.