திருப்பூர்: தேர்தல் முடிவு வரும்போது தமிழக மக்களுக்கு இரட்டை சந்தோசமாக இருக்கும் என்றும், மத்தியில் மோடி ஆட்சி அகற்றப்படும் நேரத்தில், தமிழக இடைத்தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க. ஆட்சியும் அகற்றப்படும் என திருப்பூரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
திருப்பூர்: தேர்தல் முடிவு வரும்போது தமிழக மக்களுக்கு இரட்டை சந்தோசமாக இருக்கும் என்றும், மத்தியில் மோடி ஆட்சி அகற்றப்படும் நேரத்தில், தமிழக இடைத்தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க. ஆட்சியும் அகற்றப்படும் என திருப்பூரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து கொங்கு மெயின்ரோட்டில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசினார். அப்போது அவர் பேசியதாவது :-மத்தியில் மீண்டும் நிலையான ஆட்சி அமைய பா.ஜ.க.விற்கு வாக்களியுங்கள் என மோடி கேட்கிறார். ஆனால், கடந்த 5 ஆண்டுகால நிலையான ஆட்சி இருந்தபோது, மோடி அவர்கள் என்ன செய்தார். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மேலும், இந்தியாவின் காவலாளி என்ற மோடி, விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் சாதனையை தனதாக்கிக்கொண்டு விண்வெளியின் காவலாளி என்றார், பிறகு இந்த பிரபஞ்சத்தின் காவலாளி என்றார். அவர் வெளிநாட்டிற்கு மற்ற கிரகத்திற்குமேயானாலும் காவலாளியாக இருந்துவிடட்டும், அப்போதுதான் இந்தியா பாதுகாக்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பசு காவலர்கள் என்ற பெயரில் தலித் மற்றும் சிறுபான்மையினர் மீது அதிகளவு தாக்குதல் நடைபெற்றது. குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களும், கொலைக்குற்றங்களும் அதிகரித்ததே தவிர, அவர்களுக்கான தண்டனையை இந்த அரசு வழங்கவிலை. மேலும், மே23 தேர்தல் முடிவு வரும்போது, தமிழக மக்களுக்கு இரட்டை சந்தோசமாக இருக்கும். மத்தியில் மோடி ஆட்சி அகற்றப்படும். அதே நேரம் தமிழக இடைத்தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க. ஆட்சியும் அகற்றப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும், என பேசினார்.