ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 22 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 10-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, ஆந்திரா (25), தெலங்கானா (17), அருணாச்சலப்பிரதேசம் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகலாந்து (1), சிக்கிம் (1), அசாம் (5), பிகார் (4), சத்தீஸ்கர் (1), ஜம்மு-காஷ்மீர் (2), மகாராஷ்டிரா (7), மணிப்பூர் (1), ஒடிசா (4), திரிபுரா (1), உத்தரப்பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5) மற்றும் மேற்கு வங்கம் (2) ஆகிய 18 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் (1), லட்சத்தீவுகள் (1) ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
மேலும், ஆந்திரா (175), அருணாச்சலப் பிரதேசம் (60), சிக்கிம் (32) ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவைகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மட்டும் நாளை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 18, 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார், துணை ராணுவப்படையினர் என ஏராளமானோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.