கோவை: பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் பதிவு முகாம் நடைபெற்றது.
கோவை: பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் பதிவு முகாம் நடைபெற்றது.

வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாஸ்போர்ட் பதிவு செய்யும் முகாம் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் சுவாமி நிர்மலேஷானந்தர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.

கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் கலந்துகொண்டு, சுமார் 150 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பாஸ்போர்ட் பெற விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.
முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு அவரது வகுப்பிலேயே நேரடியாக சென்று விண்ணப்பம் பதிவு செய்ய பாஸ்போர்ட் அலுவலகத்தை சார்ந்த உமா உதவினார். இந்த முகாமின் நிறைவில் கல்லூரியின் மாணவர் நலன் முதன்மையர் கந்தப்பன் நன்றியுரை கூறினார்.