திருப்பூர் : இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்காகவே மீண்டும் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திருப்பூர் : இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்காகவே மீண்டும் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தொண்டர்களிடம் அவர் பேசியதாவது :- மத்தியில் பா.ஜ.க., அரசு வென்ற பிறகு, மத்தியிலும், மாநிலத்திலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை சொல்லி ஏமாற்றியதே தவிர, நிறைவேற்றியதில்லை. அ.தி.மு.க. அரசு அதனை நிறைவேற்றித் தந்தது. இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்காகவே மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும். முதலமைச்சர், துணை முதலமைச்சர் சாமானியர்களுடன் பழக கூடியவர்களாக உள்ளனர். மத்திய, மாநில அரசு ஒத்த கருத்துடன் இருந்தால்தான் திட்டங்கள் தங்குதடையின்றி கிடைக்கும். அ.தி.மு.க. கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி, தி.மு.க. கூட்டணி வெறுக்கும் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி, என விமர்சித்துப் பேசினார்.