மேட்டுப்பாளையத்தில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா இன்று வீதி வீதியாக சென்று பரப்புரை மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா இன்று வீதி வீதியாக சென்று பரப்புரை மேற்கொண்டார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குப்பட்ட மேட்டுப்பாளையத்தில் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் ஆ.ராசா தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார். மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளை சேர்ந்த கிராமப் பகுதிகளில் இன்று ஆ. ராசா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிராமம் கிராமமாக வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ஆங்காங்கே நின்று பொதுமக்களிடம் உரையாற்றினார்.



அப்போது அவர் கூறியதாவது :- மத்தியில் ஆளும் மதவாத மோடி அரசை நீக்கிவிட்டு ராகுல் காந்தி தலைமையில் மத்திய ஆட்சி அமையவும், மாநிலத்தில் உள்ள ஊழல் நிறைந்த எடப்பாடி பழனிசாமி அரசை அகற்றி விட்டு தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையவும் மக்கள் வாக்களிக்க வேண்டும். நான் ஏற்கனவே இப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளேன். கடந்த முறையை காட்டிலும் மேலும், சிறப்பாக மக்கள் பணியாற்றிட எனக்கு வாக்களிக்க வேண்டும். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு இடங்களில் எம்.பி அலுவலகம் திறந்து பணியாற்றியவன் என்ற முறையில், மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும், என கோரிக்கை விடுத்து வாக்கு கேட்டார். 

தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா பிரச்சாரத்திற்கு சென்ற ஒவ்வொரு பகுதியிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...