நீலகிரி : கோடநாடு எஸ்ட்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரும் வரும் 12-ம் தேதி நேரில் ஆஜராக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.
நீலகிரி : கோடநாடு எஸ்ட்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரும் வரும் 12-ம் தேதி நேரில் ஆஜராக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவ குற்றவாளிகளான சயன், மனோஜ்சாமி, திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஸ்சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகிய 10 பேர் இன்று உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

அப்போது, வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை, இந்த வழக்கின் விசாரணையை வரும்12-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் அனைவரும் ஆஜராக வேண்டும் என ஆணையிட்டார்.