கோவை - சத்தி சாலையில் பறக்கும் படை சோதனையில் ரூ. 37.5 லட்சம் பறிமுதல்

கோவை : கோவை சக்தி சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 37 லட்சத்து 50 ஆயிரத்தை பறக்கு படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


கோவை : கோவை சக்தி சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 37 லட்சத்து 50 ஆயிரத்தை பறக்கு படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கோவை - சத்தி சாலை ராமகிருஷ்ணாபுரம் அருகே சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர், அவ்வழியாக வந்த காரில் சோதனை செய்தனர். அதில், தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ. 37 லட்சத்து 50 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

இந்த பணம் ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. அதற்கான உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்பப் பெறுமாறு அதிகாரிகள் அவர்களிடம் அறிவுறுத்தினர். இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...