பசுந்தேயிலைக்கு கிலோவிற்கு ரூ. 30 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் : நீலகிரியில் அ.ம.மு.க., வேட்பாளர் உறுதி

நீலகிரி : பசுந்தேயிலைக்கு கிலோவிற்கு ரூ. 30 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உதகை நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அம்மா முன்னேற்ற கழக வேட்பாளர் எம். ராமசாமி உறுதியளித்தார்.


நீலகிரி : பசுந்தேயிலைக்கு கிலோவிற்கு ரூ. 30 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உதகை நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அம்மா முன்னேற்ற கழக வேட்பாளர் எம். ராமசாமி உறுதியளித்தார். 



எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அம்மா முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் எம்.ராமசாமி உதகை நகரில் பரிசு பெட்டகத்தில் வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் எம்.ராமசாமி, வாக்கு சேகரிக்க சென்ற ஒவ்வொரு தொகுதிகளிலும் பல பிரச்சணைகள் இருக்கிறது. உதகை தொகுதியில் பல ஆண்டுகளாக வாகன பார்க்கிங் பிரச்சனை இருந்து வருகிறது. தான் வெற்றி பெற்றால் உதகை குதிரை பந்தய மைதானத்தில் பார்க்கிங் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பசுந்தேயிலைக்கு கிலோவிற்கு ரூ. 30 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் பிரச்சனைகள் குறித்து நன்கு அறிந்தவன் என்பதால், இங்குள்ள பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...