கோவை : பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த்ஃ வளர்ப்பு தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கோவை : பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வளர்ப்பு தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அருகிலுள்ள கொள்ளு பாளையம் பகுதியில் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் ஒன்பது வயது சிறுமி வகுப்பில் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதைக் கண்ட பள்ளி ஆசிரியை அந்த மாணவியிடம் விசாரித்ததில், அவரது வளர்ப்புத் தந்தை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அரசு பள்ளியின் மூலம் கோவை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, கோவை குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அலுவலர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.
இதையடுத்து, விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய போலீசார் கொள்ளு பாளையம் பகுதியை சேர்ந்த பரமன் என்கிற பரமசிவத்தின் மீது பாக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், தொப்பம்பட்டி பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டு இருந்த பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர், காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரனை மேற்கொண்டு, கோவை ஜே.எம்.5ல் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.