கோவை : கோவையில் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய கோவை தளபதி’ என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை : கோவையில் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய கோவை தளபதி’ என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக எழுந்த வதந்தியால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆத்துப்பாலம் பகுதியில் கூடினர். பின்னர், அந்த லாரியை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கண்டெய்னரில் டீத்தூள் மட்டுமே மூட்டை மூட்டையாக இருந்தது. இந்த நடவடிக்கையின் காரணமாக, சம்பந்தப்பட்ட தேயிலை நிர்வாகத்திற்கு ரூ. 45 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தின் போது கண்டெய்னர் லாரி ஓட்டுநர் பிரகாஷை தாக்கியதாக
மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் முகமது சாஜீத் 23-ம் தேதி வரை சிறையிலடைக்கப்பட்டார்.
கடந்த 9-ம் தேதி காலை கோவை தளபதி என்ற பெயரில் இணையதளத்தில் #BIGBREAKING கோவையில் சிக்கியது எஸ்.பி.வேலுமணியின் கண்டெய்னர் பணம்..!, மடக்கிப்பிடித்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தும் எடப்பாடியின் ஏவல்துறை..!, ஓட்டுக்கு பணம் கொடிக்கு இரவோடு இரவாக கண்டெய்னரில் கடத்தியது அம்பலம், என்ற பொய் செய்தி பதிவிடப்பட்டிருந்தது.
அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அரசியல் காரணங்களுக்காக பொய் பிரச்சாரம் செய்வதால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதுடன், இரு அமைப்புகளுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக, இந்த வதந்தியான செய்தியை பரப்பிய கோவை தளபதி’ என்பவர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.