தமிழகத்தில் நடக்கும் இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு தலையில் தொங்கும் கத்தியை போன்றது : பழ. கருப்பையா விமர்சனம்

நீலகிரி : தற்போது நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலையில் தொங்கும் கத்தி போன்றது என உதகையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பழ.கருப்பையா விமர்சித்துள்ளார்.


நீலகிரி : தற்போது நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலையில் தொங்கும் கத்தி போன்றது என உதகையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பழ.கருப்பையா விமர்சித்துள்ளார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து நேற்று உதகை சுதந்திர திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பழ.கருப்பையா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :- அ.தி.மு.க.வில் எந்த தலைவர்களும் இறந்தாலும் அதை மறைப்பதே அ.தி.மு.க.வின் நிலைதான். ஆளும் கட்சிக்கு தற்போது நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு தலையில் தொங்கும் கத்தி போன்றது. 

கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி பிரதமர் மோடியின் தயவால் தான் நடைபெற்று வருகிறது. அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 1,500 கோடி ரூபாய் இல்லாததால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால், பொங்கலுக்கு பரிசு வழங்குவதற்கு 2,000 கோடி ரூபாய் செலவு செய்த இந்த அரசு, ஏன் அத்திக் கடவு திட்டத்தை மேற்கொள்ளவில்லை.



ஜெயலலிதா வாங்கி வைத்த கடன் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு 19 சதவீதம் வட்டி கட்டி விட்டு மீதமுள்ள 6 சதவீதம் பணத்தை வைத்து தான் அரசை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார். வீராணம் ஏரி ஆயிரம் ஆண்டுகளாக விவசாயிகளுக்கு பயன் கொடுத்து வரும் நிலையில், அதை கட்டிய சோழன் அரசின் ஆட்சி, ஆனால் தற்போதைய நடைபெறும் ஆட்சியா..?

8 வழிச்சாலைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம், ஆனால், அத்திக் கடவு திட்டத்திற்கு 1,500 கோடி ரூபாய் இல்லை. விவசாய நிலங்களை ஆக்கிரமித்தும் 8 வழிச்சாலைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது.

காஷ்மீரில் தீவிரவாதிகளால் 40 ராணுவ வீரர்கள் பலியான நிலையில், பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து பணம் கொடுத்தும் தயார்ப்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி விமானப் படை மூலம் தீவிரவாதிகள் இடத்தில் குண்டுகள் வீசப்பட்டு 350 பேரை கொன்றதாக பெருமைப்பட்டு, 2 நாட்களிலேயே வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்று இந்தியா வீசிய குண்டில் அந்த இடத்தில் குழியானது தவிர தீவிரவாதிகள் யாரும் இறக்கவில்லை என்று எழுதியது. பிரதமர் மோடிக்கு இது கேவலமாக இல்லையா.

பிரதமர் மோடி ரேடியோ அலைவரிசையில் பேசுவார் என்றதும், பணம் செல்லாது என்று கூறி விடுவாரோ என்று மக்கள் அனைவரும் வங்கி கணக்கில் உள்ள தங்களது சேமிப்பு பணங்களை எடுக்க செல்லும் நிலைதான் நிலவுகிறது, என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...