தேசிய அளவில் அமிர்தா விஷ்வா வித்யபீதம் பல்கலை.,க்கு 8-வது இடம்

கோவை : தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் கோவையைச் சேர்ந்த அமிர்தா விஷ்வா வித்யபீதம் பல்கலைக்கழகம் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.


கோவை : தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் கோவையைச் சேர்ந்த அமிர்தா விஷ்வா வித்யபீதம் பல்கலைக்கழகம் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், உலக அளவுக்கு தரமான கல்வி நிறுவனங்களை உருவாக்கும் நோக்கத்துடனும், தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இதற்கென தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவன தரவரிசை (என்.ஐ.ஆர்.எஃப்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். அதில், தேசிய அளவில் கோவையைச் சேர்ந்த அமிர்தா விஷ்வா வித்யபீதம் பல்கலைக்கழகம் 8-வது இடத்தை பிடித்துள்ளது. மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. 

"அமிர்தா விஷ்வா வித்யபீதம் மீண்டும் முதன்மையான 10 கல்லூரிகளின் பட்டியலுக்குள் இடம் பிடித்துள்ளது. அதேபோல, மருத்துவக் கல்லூரிகளின் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளது. பல்கலைக்கழகத்திற்கு இந்தப் பெருமையைப் பெற்றுத் தந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் அமிர்தா விஷ்வா வித்யபீதம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி. வெங்கட் ரங்கன்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...