கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கருப்பு நிற ஆடை அணிந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கருப்பு நிற ஆடை அணிந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.,- பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் கொடிசியா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. பாதுகாப்பு கருதி இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள், நிகழ்ச்சி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வந்து அமர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இதனால், பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினர் என சில எதிர்பாராதவிதமாக கருப்பு ஆடை அணிந்து வந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கருப்பு ஆடையைத் தவிர்த்து பிற வண்ண ஆடைகளை அணிந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதி பாஸ் இருந்தும் சிம்ப்ளிசிட்டியைச் சேர்ந்த செய்தியாளர் கருப்பு டீ-சர்ட் அணிந்து வந்ததால் அனுமதிக்கவில்லை.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் பற்றி எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில், கருப்பு நிற ஆடையை அணிந்தவர்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.